போக்குவரத்து ஆணைக்குழு அதிரடி – அரைசொகுசு பேருந்து சேவைகள் இரத்து !
Friday, June 1st, 2018அரைசொகுசு பேருந்து சேவைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இரத்து செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகளில் பிரதானமாக, ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதாகவும், மேலதிக கட்டணங்கள் அறவிடுவதாகவும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அரைசொகுசு பேருந்து சேவைகளை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
முதியோர் இல்லத்தில் முதியோரை இணைப்பது தற்காலிக நிறுத்தம்!
இன்று இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம்!
பூநகரி,பச்சிலைப்பள்ளி, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!
|
|