நாளை பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல வாக்கு பெறுபேறுகள் வெளியாகும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
Wednesday, August 5th, 2020நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இறுதி தேர்தல் பெறுபேறுகள் நாளை நள்ளிரவிற்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் முழுமையாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்!
இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் வலிமைகளை பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏ...
|
|