இலங்கையரை நாடு கடத்த பாக்கிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, May 25th, 2016

பாக்கிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் இருவரை நாடு கடத்துவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானியர்கள் என பிழையாக கருதப்பட்டு ஈரானிய அதிகாரிகளினால் பாக்கிஸ்தானுக்கு அனுப்பட்ட இருவரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளனர்.

குறித்த இருவரையும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரானிய அதிகாரிகள் பாக்கிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது 2013ஆம் ஆண்டு தனது மகன் மற்றும் மனைவியுடன் தெஹரானுக்கு சென்றதாகவும், விசா காலம் முடிவடைந்த பின்னரும் அங்கு தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளனர்.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இலங்கையர்கள் கடவுச்சீட்டை காண்பிக்க தவறியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இருவரையும் பாக்கிஸ்தானியர்கள் என கருத்தி ஈரானிய எல்லை பாதுகாப்பு படையினர் பாக்கிஸ்தானுக்கு அனுப்பியுள்ளனர்.

எனினும், பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குறித்த இருவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts: