உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வாக்குச் செலுத்துவதில் ஆர்வங்காட்டும் வாக்காளர்கள்!

Saturday, February 10th, 2018

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தவருகின்றனர்.

வாக்குப்பதிவு ஆரம்பமாகி முதல் இரண்டு மணி நேர வாக்குப் பதிவுகளின் பிரகாரம் வாக்குப் பதிவுகள் சீரான வகையில் இருந்துவருவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கலையிலேயே சென்று வாக்குகளை அளிக்குமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரியுள்ளன. 43 அரசியல் கட்சிகளும், 222 சுயாதீன குழுக்களும் போட்டியிடும் இந்த தேர்தலில் 15760867 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் உள்ளிட்ட நாட்டின் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 57219 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில்  8346 உறுப்பினர்களே சபைகளுக்கு தெரிவு செய்யப்பட உள்ளனர்.

குறித்த வாக்குப் பதிவானது இன்று மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளதால் மக்கள்  அதிகளவானோர் வாக்களித்து தமது ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: