உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!
Monday, September 5th, 2022அரசியலமைப்பை மறுசீரமைப்பு மூலம் கலப்பு தேர்தல் முறைமையை தயாரித்து உள்ளுராட்சி மன்றங்களுக்காக அதிகூடிய அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க ஆக்கப்பூர்வமான நடடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
அரசியலமைப்பு, மறுசீரமைப்பு ஊடாக உயரிய சபையான நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம் கலப்பு தேர்தல் முறைமை தயாரிக்கப்படும். வாழ்க்கை சுமை அதிகரித்துள்ள மக்களின் நலன்புரி விடயங்களுக்காக புதிய யுத்திகள் கையாளப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
சிற்பக் கலாநிதி சிவப்பிரகாசம் காலமானார்!
மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகம் - O/L பரீட்சையில் மாற்றமில...
இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டு...
|
|