உள்ளூராட்சி தேர்தலுக்காக 7,000 கண்காணிப்பாளர்கள் கடமையில் – தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தகவல்!

Sunday, January 29th, 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் முதல் மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ( PAFFREL) தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு கோரி தாம் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஹிரு செய்தி வினவலில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தலைவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.

இதேவேளை நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தொலைபேசி அழைப்பின் மூலம் அவருக்கு நேற்றுமுன்தினம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்துள்ளதகவும் கூறினார்.

இதற்கு முன்னதாக இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: