உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஆரம்பம்!

Friday, May 11th, 2018

வடமாகாணத்தில் உள்ளுராட்சி திணைக்களங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு இன்று நடைபெறுகின்றது.
வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகம் யு.என்.டி.பி ஆகியவற்றின் அணுசரணையில் இந்த கருத்தமர்வு  இன்று யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெறுகின்றது.

இந்த ஒருநாள் பயிற்சி பட்டறையில் யாழ் மாவட்டத்தில் உள்ள சகல உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உப தவிசாளர்கள், தவிசாளர்கள் ஆகியோரை கலந்துகொள்ளுமாறு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் சகல சபைகளுக்கும் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை வலிகாமம் தெற்கு, வலிகாமம் கிழக்கு, பருத்தித்துறை, வலி வடக்கு, வலி மேற்கு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், நெடுந்தீவு, வடமராட்சி தெற்கு மேற்கு ஆகிய பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை, நல்லூர் பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேசசபை, வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் பயிற்சி பட்டறை இடம்பெறவுள்ளது.

பயிற்சி பட்டறையில் தவிர்க்க முடியாத காரணத்தால் யாராவது உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாவிட்டால் அவ் விவரம் தொடர்பாக இரு நாள்களுக்கு முன்னர் உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

IMG_4880 IMG_4884

Related posts: