உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினம் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பு!

Thursday, January 26th, 2023

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது, அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது

அத்துடன் தேர்தல் வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான பணிகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும் அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதேநேரம் கல்முனை நகர மற்றும் எல்பிட்டி பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இந்த முறை இடம்பெறவுள்ளது.

அதேநேரம், இந்தமுறை ஒரு கோடியே 70 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் அச்சிட எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கண்காணிப்பு ஆணைக்குழுக்களுக்கு இடையே இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இந்திய பிரதமரிடம் பல கோரிக்கைகளை முன்வைக்கவுளோம் - கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு மக்களின் காணிகள் சுவீகரிப்பு - தெல்லிப்பழை பிரதேச செயலகம் அறிவிப்ப...
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை - முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!