உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை இரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தவு!

Friday, March 3rd, 2023

2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை இரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்கான கூட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்சமயம் இடம்பெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான எம்.எம்.மொஹம்மட், எஸ்.பி. திவாரத்ன மற்றும் கே.பி.பி. பதிரண ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின், கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதற்கமைய, தேர்தல் இடம்பெறும் புதிய திகதி இன்று அறிவிக்கப்பட உள்ளதுடன், அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் திகதி தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல...
அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு - கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர...
286 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கம் - எந்தப் பிரச்சினையும் வராது என்றும் நிதி இராஜ...

500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை - முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன - பிரா...
கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் விஜயதாச ராஜபக்...
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை - கல்வி அமைச்...