உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுகின்றது – தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் சுட்டிக்காட்டு!

Friday, November 5th, 2021

உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடை 2 ஆயிரத்து 800 மில்லியன் ஆகும். இதில் 70 சதவீதம் வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய்பூவை கையால் பிழிந்தால் 20 முதல் 30 சதவீதம் தேங்காய்ப் பால் கிடைக்கும். எனினும் ப்ளெண்டரில் அல்லது மிக்ஸியில் அரைத்தால் 50 சதவீதம் தேங்காய்ப் பால் கிடைக்கும் என்றும் தேங்காய்களை சரியான முறையில் உட்கொண்டால், ஒரு வீட்டுக்கு அரைத் தேங்காய் போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சௌபாக்ய கப்ருக வேலைத்திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் முதல் ஏற்றுமதிப் பயிராக தேங்காயை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தேயிலை மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து 260 மில்லியன் அமெரிக்க டொலரும், இறப்பரில் இருந்து 750 மில்லியன் அமெரிக்க டொலரும், தேங்காய் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலரும் அந்நியச் செலாவணியாக நாடு பெறுகிறது.

2023 ஆம் ஆண்டளவில் தேங்காய் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி அயிரத்து 300 அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு - சுற்றுலாத்துறை அமைச்சர...
குறைந்த வருமானம் பெறும் இரண்டு இலட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம் நாளைமுதல் ஆரம்பம் ...
இலங்கை இன்று மறுமலர்ச்சி பாதைக்கு பிரவேசித்துள்ளது - அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற ஜனாதிபதி ...