உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் – கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டு!
Friday, September 17th, 2021பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படுகின்றன நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி தலைமையிலான கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயலணி தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இதுவரை 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசாரணை செய்ய இன்டர்போல் அனுமதி!
உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு...
இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியானது!
|
|