உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, February 8th, 2021

உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தள்ளது.

அத்துடன் குறித்த இலக்கிற்கு அமைய, அதிகாரிகள் தங்களின் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் விவசாயத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது..

நாட்டின் வெங்காயத் தேவையில், நூற்றுக்கு 22 சதவீதமானவை உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், எஞ்சியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக வருடாந்தம் 12 முதல் 15 பில்லியன் அளவான பணம் செலவு செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த ஆண்டு வெங்காய உற்பத்தியை நூற்றுக்கு 35 சதவீதமாகவும், 2023ஆம் ஆண்டில் 60 சதவீதமாகவும் அதிகரிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: