உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது – அமைச்சர் மங்கள சமரவீர!

அரசாங்கம் பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியை தற்போது அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு கொழும்பு குளோபல் ரவரில் இடம்பெற்ற செயலமர்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.இலங்கையில் தகவல் அறியும் சட்டத்தை செயல்முறையில் நடைமுறைப்படுத்தல் என்னும் தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை துரிதமாக முன்னேறி வருவதாகவும், இது தொடர்பான அறிவை வழங்கி மக்கள் வலுப்படுத்தப்படவுள்ளார்கள். தகவல் அறியும் சட்டத்தை சமூகமயப்படுத்துவது அவசியம் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!
தேவையற்ற வகையில் குளோரோகுயின் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டாம் - 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செ...
அதிகமான வெப்பநிலை - பொதுமக்களிடையே ஒரு வகை தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை !
|
|