உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுமானால் அதை ஏற்க முடியாது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
Friday, July 16th, 2021ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளஅமைச்சர் நாமல் ராஜபக்ச மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் போராட்டங்களில் வெற்றிபெறுவதற்கும் தொழிற்சங்கங்களிற்கு உரிமையுள்ளது.
தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என்றால் அதனை உண்மையான தொழிற்சங்க போராட்டம் என அழைக்க முடியாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாணவர்களிற்கு கல்வி புகட்டுவது தேசிய போராட்டம் என தெரிவித்துள்ள அவர், ஆசிரியர்கள் அவ்வாறான பொறுப்பை கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மருந்துகளின் விலைக்குறைப்பு நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றி - உலக சுகாதார அமைப்பு!
நாடு முடக்கப்படாது – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர், அ...
|
|