உப குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிப்பு!
Saturday, November 19th, 2016அரசியல்யாப்பு பேரவை இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது. இதன்போது அரசியலமைப்பு பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உபகுழுக்களின் 6 அறிக்கைகள் அரசியல் யாப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் சம்பந்தமான உப குழு, நீதித்துறை சம்பந்தமான மீது உபகுழு, நிதி சம்பந்தமான உபகுழு, பொது பாதுகாப்பு பொலிஸ் மற்றும் சட்ட அமலாக்க உபகுழு, பொது சேவை மறுசீரமைப்பு உபகுழு மத்திய அரசு மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான தொடர்பு சம்பந்தமான உப குழு ஆகிய 06 உப குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த ஆறு உப குழுக்களுக்கும் ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
Related posts:
பெப்ரவரி 14 ஆம் திகதிமுதல் இலங்கையில் ஆரம்பிக்கப்படுகின்றது ஆடம்பர ரயில் சேவை!
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை - தேசிய கணக்...
தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய க...
|
|