உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுமானால் அதை ஏற்க முடியாது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
Friday, July 16th, 2021
ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளஅமைச்சர் நாமல் ராஜபக்ச மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் போராட்டங்களில் வெற்றிபெறுவதற்கும் தொழிற்சங்கங்களிற்கு உரிமையுள்ளது.
தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என்றால் அதனை உண்மையான தொழிற்சங்க போராட்டம் என அழைக்க முடியாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாணவர்களிற்கு கல்வி புகட்டுவது தேசிய போராட்டம் என தெரிவித்துள்ள அவர், ஆசிரியர்கள் அவ்வாறான பொறுப்பை கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்!
சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போதுமக்களுக்கு எச்சரிக்கை!
|
|
|


