உரங்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை!
Sunday, September 10th, 2023உரங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையின்றி போதுமான தொகையினை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து அங்கீகாரம் பெற்ற உர இறக்குமதியாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உர மானியத்துக்கு பதிலாக நிதி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு அவற்றை மானியமாக வழங்கும் செயற்பாட்டிலிருந்து தாம் விலகியுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே அவசியம் - முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுடன் அமைச்சர்களாக செயற்பட அனைவரும் இணக்கம் - அமைச்சர் பிரச...
ஐரோப்பாவிலும் தமிழ் மொழி கலாசாரங்ளை வளர்த்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் – யாழ்ப்பாணத்துக்கான முன்னா...
|
|