உரங்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை!
Sunday, September 10th, 2023
உரங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையின்றி போதுமான தொகையினை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து அங்கீகாரம் பெற்ற உர இறக்குமதியாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உர மானியத்துக்கு பதிலாக நிதி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு அவற்றை மானியமாக வழங்கும் செயற்பாட்டிலிருந்து தாம் விலகியுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
15 வீத வற் வரியை சிகரட்டிற்கு விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
மூதூர் - தொண்டமானாறு பேருந்து சேவை திங்கள் முதல்!
விஞ்ஞானபூர்வமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை - சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்...
|
|
|


