உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கருத்து தெரிவிப்போரிடமும் அறிக்கை பெறப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்த விசாரணை குறித்து பல்வே இடங்களில் கருத்துக்களை தெரிவிப்போரிடமும் அறிக்கைகள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவியல் சட்டக்கோவை 110 ஆவது சரத்துக்கு அமைவாக பொலிசாருக்கு இந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தில்) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்  –

கைதுசெய்யப்பட்டவர்களில் 202 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற தீவிரவாதம் தொடர்பாக் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் நாம் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றோம். இதுதொடர்பாக இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 697 கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறுதியாக குளியாப்பிட்டி பிரதேசத்தில் மூவரும் நேற்றுக் காலை இருவரும் காலை கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் 702 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுள் 83 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பில் குற்றநச்செயல் தடுப்பு பிரிவு பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இவர்கள் மத்தியில் பல்வேறு நபர்கள் இருக்கின்றனர். விசேடமாக முக்கியகொலையாளியான சஹரான் ஹாஸிமின் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹாதியாவின் தந்தை உள்ளிட்டோரும் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: