உயர்தர பரீட்சை ஏப்ரல் மாதத்தில்!

Saturday, April 23rd, 2016

வழமையாக ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சையின் பின்னர், பல்லைகழக பிரவேசத்திற்காக காத்திருக்கும் காலத்தை குறைக்கும் நோக்கிலே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த யோசனைக்கு கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாகவும் உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: