உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல் விநியோகம்!
Tuesday, January 1st, 20192018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று(01) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இந்த சான்றிதழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர்கல்வியைத் தொடர்வதற்காக சமர்ப்பிக்கும் வகையில் விநியோகிக்கப்படவுள்ளது.
இதனைசாதாரண சேவை மூலம் அல்லது ஒருநாள் சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் ஒருநாள் சேவை ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், அதன் மேலதிக பிரதி ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு 350 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
பொலிஸ் ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்!
பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவிற்கு புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா ...
நாடு முன்னோக்கி நகர்வதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம் – ஐக்கியத்துக்காக அமைச்சு பதவியையும் துறக்க தயார...
|
|