உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை!
Tuesday, February 1st, 20222021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதிமுதல் மார்ச் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவை மீறினால் பரீட்சை சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதேநேரம் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிட்தக்கது.
000
Related posts:
இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு தட்டுப்பாடு!
பல மணிநேர போராட்டத்திற்கு பின் எவர் கிரீன் கப்பல் மீட்டெடுப்பு!
இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு பரிந்துரை!
|
|
வடக்கு மருத்துவர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் - மருத்துவ அதிகாரிகள் சங்...
மறுபடியும் பொய் கூறுகிறது கூட்டமைப்பு –ஏமாரவேண்டாம் என்கிறார் ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வர...
எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம் ...