உதவிகளை வழங்கத் தயார் – அந்தோனியோ குட்டரஸ்!

பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(23) பிற்பகல் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
எரிவாயு பற்றாக்குறை : 1000 பேக்கரிகளை மூடும் நிலை - பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!
உலகை அச்சுறுத்தும் டெங்கு: ஐம்பதாயிரம் பேர் பாதிப்பு!
துருக்கி பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்துவைப்பு!
|
|