உடன் பதவி நீக்குங்கள்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
Friday, May 4th, 2018இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உயர் அதிகாரிகள் இருவரை உடன் பதவி நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட உள்ள திட்டம் ஒன்றுக்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் இரண்டு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குறித்த இரு முக்கிய உயர் அதிகாரிகளையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.
இவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் – இலங்கையின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 870 ஆக...
அடிப்படை உரிமை மனு விசாரணை ஜூலை 14இல்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து - அமைச்சர்கள் குழுவின் ஆலோச...
|
|