உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து விமானப் பயணிகளுக்குமான அவசர அறிவிப்பு!
Wednesday, August 10th, 2022
உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் வர்த்தக அளவிலான பொருட்களை விமான நிலையம் அல்லது UPB கிடங்குகள் மூலம் எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து விமானப் பயணிகளுக்கும் இலங்கை சுங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
பாகிஸ்தான் பிரதமர் பதவி விலகினார்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர், பணிக்குழாமினர் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவை!
தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வு !
|
|
|


