ஈழ மக்கள் ஐனநாயக கட்சிக்கு முழு ஆதரT – VISION 6 ஒருங்கிணைப்பாளர் சாம் வரதன் அறிவிப்பு!

Tuesday, July 14th, 2020

மக்களுக்கான அபிவிருத்தியையும் அரசியல் தீர்வையும் ஒரே நேர்கோட்டில் வழிநடத்தி செல்லக்கூடிய ஒரே தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே. அந்த வகையில் 2020 நாடாளுமன்ற தேர்தலில் VISION 6 அவரின் கைகளை பலப்படுத்தி மக்களுக்கான சுபீட்சமான  வாழ்க்கையை உருவாக்கி கொடுக்க எமது பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம் என அதன் ஒருங்கிணைப்பாளர் சாம் வரதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தாயக மக்களின் விடியலுக்காக தம்மால் இயன்ற அளவு பணிகளை ஆற்றிவரும் தேசபற்றுள்ளவர்களினால் உருவாக்கப்பட்ட VISION 6  அமைப்பு தமிழ் மக்களை போலிதேசியவாதிகளிடம் இருந்து மீட்டு மாற்று தலைமையை உருவாக்கும் முயற்சியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்த VISION6 செயல்பாட்டாளர்கள் பல அரசியல் கட்சிகளுடனும் , பல பொது அமைப்புக்களுடனும் பல சுற்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்கள்.

அந்த வகையில் சகல விதமான விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாராக தேர்தலை மட்டும் நோக்கமாகன கூட்டணி மட்டுமன்றி அதற்கும் அப்பால் தமிழ் மக்களுக்கான பொது வேலை திட்டத்திற்கான ஐக்கியத்திற்கு தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா எமக்கு உறுதியளித்தது

அதுமட்டுமல்லாது அதற்கான முழு முயற்சிக்கும் தனது பூரண பங்களிப்பை வழங்கி இன்றுவரை பயணித்து கொண்டு உள்ளார்.

எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் தேவைகளையறிந்து  ஐக்கியத்திற்காக தனது முழு ஆதரவை வழங்கி இன்று வடக்கு கிழக்கு எங்கும் எழுச்சியுடன் பயணத்தை தொடங்கி உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தாயகத்தில் செயல் படும் vision 6 இளைஞர் கட்டமைப்பு தமது  பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார்கள் இவர்களுடன் புலம்பெயர் கட்டமைப்பும் முழு ஆதரவை வழங்கும்.

அத்தோடு நின்று விடாமல் பாராளுமன்ற தேர்தலின் பின்பும்  தமிழ் மக்களுக்கான பொது வேலைத்திட்டத்திற்கான ஐக்கிய முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என VISION6 ஒருங்கிணைப்பாளர் சாம் வரதன் தெரிவித்தார்.

Related posts: