இ.போ.சபை பேருந்துகள் பணிப்புறக்கணிப்புக்கு தயார்!

Monday, December 31st, 2018

வடக்கு மாகாணம் முழுவதும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் எதிர்வரும் 04ம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

வட பிராந்திய பிரதம பிராந்திய முகாமையாளர் நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டு வருதால், அவரை உடனடியாக இடமாற்றக் கோரி குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: