இ.போ.சபை ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!
Thursday, June 13th, 2019
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று(13) பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பதவி உயர்வுக்கு இணையான வேதன அதிகரிப்பை வழங்குமாறு கோரி தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Related posts:
இளம் கர்ப்பிணிப்பெண் படுகொலையை கண்டித்து ஊர்காவற்றுறையில் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலம்!
சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை - மருந்து கொள்வனவுக்கு 82 ...
ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் ஜனவரி 1 ஆம் திகத...
|
|
|


