இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை – பதிவாளர் நாயக திணைக்களம்!
Wednesday, January 22nd, 2020
காணி உரிமங்களை இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவுசெய்வதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்துள்ளார்.
காணி பதிவுசெய்வதற்கான புதிய மென்பொருளை அடுத்த மாதம் தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காணிப் பதிவுகள் விரைவுபடுத்தப்படும் எனவும் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பில் வருடமொன்றுக்கு சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊர்காவற்றுறை பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!
2021 அம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான திகதிகள் பரீட்சை திணைக்களத்தால் அறி...
|
|
|


