இலங்கை விவசாய நாடாக கட்டியெழுப்பப்படுகின்றது – பைசர் முஸ்தபா!
Monday, June 12th, 2017
வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்படுத்தி கொம்போஸ்ட் பசலையை உருவாக்குவதன் மூலம் இலங்கையை விவசாய நாடாக கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் தோற்றம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பிலியந்தலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்துள்ளார்.
கழிவுகள் தொடர்பான முகாமைத்துத்தில், இலங்கையில் பாரிய பிரச்சினைகள் நிலவுகின்றன
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சமூகத்திற்கு குப்பைகளை மீள்சுழற்சி செய்வது தொடர்பான தெளிவூட்டல் தேவைப்படுகின்றது
குப்பைகளை வீடுகளில் மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு பாரியளிவில் சேவை ஒன்று முன்னெடுக்கப்படுவதுடன், விவசாய துறையின் வளர்ச்சிக்கும் அது பாரிய பங்களிப்பாக அமையும் என அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்
Related posts:
ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை - யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!
சேவை காலத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் தினேஷ் குணவர்தனவுட...
|
|
|


