இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
Thursday, February 7th, 2019அமெரிக்க டொலரின் பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் நேற்று வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்துக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாகப் பதிவாகி இருந்தது.
கடந்த வருடம் இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பொருளியல் துறைசார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வருட ஆரம்பம் முதல் இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிப்பு- ஆசிரியர் சங்கம்!
யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கண்காட்சி
அடுத்த வருடம் புதிய 10 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புக்கள் நாட்டிற்குக் கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர்...
|
|