இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறைவேற்றம்!

Saturday, March 24th, 2018

பாகிஸ்தானின் குடியரசு தினத்ததை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கும் பாகிஸ்தானின் பிரதமருக்கும் இடையில் உத்தியோக பூர்வ சந்திப்பு  பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச பயிற்சி நிறுவனத்திற்கும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்குமிடையிலான ஒப்பந்தத்தில் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயகவும் பாகிஸ்தானின் வெளிநாட்டு செயலாளரும் இடையில் மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய பாடசாலைக்கும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், இதில் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரும் பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரியின் பீடாதிபதியும் கைச்சாத்திட்டமை குறிப்படத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தமொன்றில் பாகிஸ்தானின் மாநில கூட்டுறவு இராஜாங்க அமைச்சின் செயலாளரும் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரும் கைச்சாத்திட்டதாக தெரிழய வந்துள்ளது.

Related posts:

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிபால டி...
திருகோணமலை மாவட்டத்தில் 50 நனோ தொழிநுட்ப வசதியுடன் கூடிய குடிநீர்த் திட்டம் - இராஜாங்க அமைச்சர் சனத்...
சீனி வரி குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர...

வடக்கு கிழக்கில் பெண்களை உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா - கிளிநொச்சியில் யாழ் மாநகர...
அபிவிருத்தியடைந்துவரும் நாடகளின் நலன்கள் தொடர்பில் ரஷ்யாவின் அக்கறை பாராட்டத்தக்கது - ஜனாதிபதி கோட்ட...
வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம் -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக...