இலங்கை மனித உரிமைகள் மீளாய்வு அறிக்கை ஐ.நாவில்!

Tuesday, February 20th, 2018

ஜெனிவாவில் எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கையின் சமகால மனித உரிமை நிலைமைகளின் முன்னேற்றமீளாய்வு அறிக்கை ஒன்றை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் பின் ராட் அல் ஹூசைன் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் தனது கருத்துக்களைமுன்வைக்கவுள்ளார்.

இந்த மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கையை பிரநிதித்துவப்படுத்தி விசேட தூதுக்குழு ஒன்று கலந்து கொள்ளும் .

Related posts: