இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் துறைசார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை!

Monday, January 23rd, 2023

ஜனக்க ரத்நாயக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் உள்ள எனையவர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தோன்றுவதால், அது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனது குறுகிய தனிப்பட்ட ஆதாயங்களை நிறைவேற்றுவதற்காக முழு நாட்டையும் இருளில் தள்ள முயற்சிக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நவம்பர் மற்றும் ஜனவரியில் இரண்டு அமைச்சரவை பத்திரங்கள் மின் கட்டணத்தை மாற்றியமைக்க செலவுக்கு ஏற்றதாக மாற்றப்பட்டன.

எதிர்காலத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய கட்டண சரிசெய்தல் தேவைப்படுகிறது.

தடையில்லா மின்சாரம் வழங்குவது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சாதகமான பதிலைப் பொறுத்தது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம், ஆனால் அதன் தலைவரின் அறிக்கைகள் அவரது தனிப்பட்ட கருத்துக்களை மாத்திரமே பிரதிபலிக்கின்றன.

அவருக்கு அரசியல் நிகழ்ச்சி நிரல், வேறு மறைமுக நோக்கங்கள் இருக்கலாம் அல்லது வேறொரு நபருக்காக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கலாம். இது தவறு” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது

000

Related posts: