இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர உடன்படிக்கை தொடர்பில் 12ஆம் திகதி தகவல்!
Sunday, July 8th, 2018
எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர உடன்படிக்கை தொடர்பில் விளக்கமான தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த உடன்படிக்கை தொடர்பில் மெல்கம் காடினல் ரஞ்சித் ஆண்டகையை தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய இதனை தெரிவித்தார்.
தொழிற்துறையினர் என்ற அடிப்படையில், இந்த உடன்படிக்கை தொடர்பில் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாதெனவும், இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை மற்றும் மோசடிமிக்க தேசிய வர்த்தக கொள்கை என்ற தலைப்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
எல்லைத்தாண்டி மீன்பிடித்த 43 இந்திய மீனவர்கள் கைது!
ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்காக விண்ணப்பிக்க முடியும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சி...
|
|
|


