இலங்கை குண்டு வெடிப்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரனும் பலி?

Tuesday, April 23rd, 2019

கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவின் உறவினரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் பேரன் ஜயான் சவுத்ரி என்ற சிறுவனே கொழும்பு குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளார்.

ஷேக் ஹசீனாவின் உறவினர்களான, தாய், தந்தை, இரு மகன்கள் என கொழும்பிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது சிறுவனின் தந்தை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, 8 வயதான ஜயான் சசுத்திரி என்ற ஷேக் ஹசீனாவின் பேரன் காணாமல் போயிருந்த நிலையில், அவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குடும்பமாக தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் உயிரிழந்த சிறுவனின் தந்தை நாடு திரும்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று பங்களாதேஷிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.

Related posts: