இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது !
Sunday, October 29th, 2023இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 14 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று இரவு 23 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
000
Related posts:
தாதியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் பணிப் புறக்கணிப்புக் கைவிடப்பட்டது!
இலங்கையில் போர் விமானங்கள் கொள்வனவு செய்ய தடை - ஜனாதிபதி!
ஆண்டு இறுதிக்குள் 280 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி - இலக்கை அடைய முடியும் என ஏற்றுமதியாளர் சங்கம் ...
|
|