இலங்கை – அவுஸ்திரேலிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு!

Thursday, May 6th, 2021

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இலங்கை – அவுஸ்திரேலியா நட்புறவு சங்கத்தைப் புதுப்பிக்கும் கூட்டத்தில் அதன் தலைவராக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இலங்கை – அவுஸ்திரேலியா நட்புறவு சங்கத்தைப் புதுப்பிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கனக்க ஹேரத் புதிய செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முசம்மில், ஹெக்டர் அப்புஹாமி மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உப தலைவர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ பொருளாளராகவும், வைத்தியகலாநிதி உப்புல் கலப்பதி பிரதி செயலாளராகவும் தெரிவாகினர்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு அதிகப்படியான பங்களிப்புக்களைச் செய்து வருவதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

“நாம் தொலைதூரத்தில் உள்ள இரு கண்டங்களின் நண்பர்களாக இருந்தாலும், எமது மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக அவுஸ்திரேலியா உள்ளது.

12 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதுடன், மேலும் பல மாணவர்கள் உங்கள் நாட்டில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விரும்புகின்றனர்.

எங்கள் மக்கள் மீது உங்கள் நாடு காண்பித்துவரும் அக்கறைக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றியையும் சபாநாயகர் இதன்போது தெரிவித்திருந்தமை குகுறிப்பிடத்தக்கது.

000

Related posts: