இலங்கைளில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவு!

Thursday, July 22nd, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 604 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இவர்களில் ஆயிரத்து 566 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 38 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 89 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 930 பேர் கொவிட் நோயிலிருந்து குணமடைந்தனர். இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 63 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 21 ஆயிரத்து 949 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 47 பேர் கொவிட்-19 நோயால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்றுமுன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 நோயால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை, 3 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: