இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா – 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள் பதிவு!

Sunday, May 16th, 2021

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் 400 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 317 மரணங்கள் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பினரது புள்ளிவபரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இதுவரையில் நாட்டில் 921 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்தனர். அவர்களில் 77.85 சதவீதமான மரணங்கள் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.

Related posts: