இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்!

Sunday, August 22nd, 2021

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198  பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 23 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது

Related posts: