இலங்கையில் 300 மில்லியன் டொலரில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்!
Tuesday, February 13th, 2018இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்காக இந்தியாவின் எரிவாயு இறக்குமதி நிறுவனம் ஒன்றும் ஜப்பானின் பங்குநிறுவனங்களும் இணைந்துள்ளன என பி.ரீ.ஐ. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நிறுவனங்கள் 300 மில்லியன் டொலர்களை இந்த வேலைத்திட்டத்துக்காக முதலீடு செய்யவுள்ளன.
இந்த மின்னுற்பத்தி நிலையம் இந்தியா – ஜப்பான் கூட்டு ஒத்துழைப்பில் கரவலப்பிட்டியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த மாதம் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலத்திரனியல் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்!
யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பிற்கு நேரடி புகையிரத சேவை ஆரம்பம்
20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் தலைமையில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்...
|
|