இறுதி நாட்களிலேயே நாட்டை திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் – இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் தகவல்!

Wednesday, August 25th, 2021

10 நாட்களின் பின்னர் நாட்டை திறப்பதா அல்லது தொடர்ந்தும் முடக்குவதா என்ற கேள்விக்கு நேரடியாக ஒரு பதிலை கூற முடியாதுள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இப்போது நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதற்காக பத்து நாட்களுக்கு பின்னர் என்னவாகும் என்பதை கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இறுதி நாட்களில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: