இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால விசா – அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு !
Tuesday, March 8th, 2022
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால வீசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை வழங்கும் நோக்கில் குறித்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
குறித்த யோசனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இலங்கையில் முதலீடு செய்யவும், வேலை செய்யவும் மற்றும் வாழவும் ஊக்குவிக்கும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா வைரஸ்: தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் தொடர்பிலான அறிக்கையை ...
அடுத்த மாதம்முதல் எயார் இந்தியா விமான சேவைகள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு - சுற்றுலா அதிகார சப...
|
|
|


