இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!
Monday, July 23rd, 2018உலக சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக துறைசார் வல்லுனர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சவூதி அரேபியாவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்ற காரணத்தினால் எரிபொருள் விலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதியில் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71 அமெரிக்க டொலர் விலையை நெருங்கியுள்ளது.
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரென்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 73.11 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டியில் இ.போ.ச. வட பிராந்தியம் சாதனை!
கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்துக்கும் அதிகம்!
தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
|
|