திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஹம்பாந்தோட்டையில்!
Friday, May 25th, 2018சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஹம்பாந்தோட்டையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான வெளிநாட்டு நேரடி முதலீடாக 700 மில்லியன் டொலர்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இது இலங்கை ரூபா மதிப்பில் 10,850 கோடி ரூபாவாகும்
ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படும் குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் மாதமொன்றுக்கு சுமார் 200 மெகாவோட் மின்னுற்பத்தியை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடன் வழங்குவது தொடர்பில் தனியார் வங்கிகளிடம் கோரிக்கை!
தொடர்ந்தும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி தி...
தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய 66 ஆயிரத்து பேர் இதுவரை கைது!
|
|