இலங்கையில் புதியவகை வீரியம்கூடிய கொரோனா அடையாளம் – துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு!
 Wednesday, January 13th, 2021
        
                    Wednesday, January 13th, 2021
            
பிரித்தானியா மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வீரியம் கூடிய கொரோனா தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார சேவைகள் பிரதி இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
யாழ் குடாநாட்டில் 15 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு - யாழ் போதனா வைத்தியசாலை பணி...
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் !
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        