இலங்கையில் திரவ இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க ஆய்வு!
Saturday, March 3rd, 2018இயற்கை எரிவாயு மிதக்கும் முனையத்தையும், திரவ இயற்கை எரிவாயு முனையத்தையும் அமைப்பதற்கான செயலாக்க ஆய்வு இந்த மாதம் நடைபெறவுள்ளதாக துறைமுக அதிகார சபைதெரிவித்துள்ளது.
இவற்றை அமைப்பதற்கான திட்டம் கொழும்பு தென் துறைமுகத்தில் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது நிதி சார்ந்து மாத்திரம் அல்லாமல், சூழல்பாதுகாப்பு மற்றும் பொதுபாதுகாப்பு ஆகிய விடயங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இலங்கையில் திரவ இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜப்பானும், இந்தியாவும் இணைந்து முன்னெடுக்கவுள்ளமைகுறிப்பிடத்தக்கது
Related posts:
விரைவில் மயிலிட்டி துறைமுகம் மக்கள் பாவனைக்கு விடப்படும் - மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க!
ஆஸி உயர்ஸ்தானிகர் - இராணுவ தளபதி சந்திப்பு!
உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் - வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணி...
|
|