வைத்தியசாலையில் கொரோனா அபாயம் எதுவும் இல்லை – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமார் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020

வவுனியா வைத்தியசாலையில் கொரோன சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் கொரோனா அபாயம் காணப்படுவதாக வெளியான செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இது தெர்ர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

வவனியா பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதன் மூலம் சமூகப்பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அத்துடன் இன்று தொற்று நீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்திசாலையின் பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது. ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்றுவருகின்றது.

ஊழியர்கள் பயணிக்கும் மற்றைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

முன்பதாக கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தரியசாலை மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: