இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Tuesday, March 12th, 2019

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்ளனர்.

இதனைத்தவிர, ஐக்கிய இராச்சியம், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: