இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவிக்கையில் –
“குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது, அவருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|